வேலை நிமித்தமாக ஒரு வாரம் ஆஸ்திரியா சென்றிருந்தேன். அங்கு தான் நடந்தது அந்த அழகான நிகழ்வு.
அலுவலகத்தில் வழக்கம் போல் அறிமுகப்படுத்தும் கூட்டம் நடந்தது, அங்கு தான் கண்டேன் சாராவை அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு, நம்ம ஊரு பொண்ணுங்ககிட்ட இருக்க எந்த அம்சமும் இல்லை இருந்தாலும் அழகு, (அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே பாட்டு உள்ளுக்குள் கேட்க்க, வாயில் வடிந்த வாட்டர் ஃபால்சை துடைத்துவிட்டு) இருவரும் கை குலுக்கினோம் (பேக்ரௌண்டுல குணா பாட்டு "பார்த்த விழி" பாட்டு தான்). சாரா சிறு குறிப்பு - என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் அழகை, மாதுளை நிறம், நீல நிறக்கண்கள், கூந்தல் அந்நாட்டவர்க்கே உரித்தான நிறம், இது போதுமென்று நினைக்கிறேன். (இதுக்கு மேல சொல்லி யாரு அடிவாங்குறது, மேலும் நான் கவிஞர் கருப்பு இல்லை)
மதிய உணவு (என்ன வெரைட்டி ரைஸா கிடைக்கும் வல்க்கர் தான்) பர்கர் தான். மாலை மங்கியது, நான் ஹோட்டலுக்கு கிளம்பும் தருவாயில் சாரா அழைத்தாள் (அடுத்த மியூசிக் என் இனிய பொன் நிலாவே கிட்டார் மியூசிக் ஒலித்தது) அப்படியே திரும்பி என்னவென்று வினவினேன் 6 மணிக்கு என்னை அருகில் உள்ள காஃபி ஷாப்பில் சந்திப்பதாகவும் அருகில் இருக்கும் இடங்களை சுற்றிக் காட்டுவதாகவும் சொன்னாள் (இதற்காகத் தானே ஆசை பட்டாய் என விவேக்கின் குரல் ஒலித்தது) நானும், உங்கள் நேரத்தை என்னோடு செலவு செய்வதற்கு நன்றி என கூறினேன், புன்னகையை உதிர்த்து 6 மணிக்கு சந்திப்போம் எனக் கூறி மறைந்தாள்.
உள்ளுக்குள்ளே பட்டாம்பூச்சி கூட்டமே பறந்து கொண்டிருந்தது இருக்காதா பின்னே, வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பெண்ணுடன் காஃபி, ஊர் சுற்றுதல் இன்று கடவுள் எனக்கு நல்லவராய்த் தெரிந்தார்.
சரியாக 6 மணிக்கு ஆஜரானேன் காஃபி ஷாப்பில், சில வினாடிகளில் அவளும் வந்தால். அவளே இருவருக்கும் மெனு கார்டில் இருந்த மோக்கா காஃபியும் சில இனிப்பு ரொட்டிகளும் ஆர்டர் செய்தால். பேசத் துவங்கினோம், அவள் கேட்ட முதல் கேள்வி Do you have a Girl Friend ?? நமக்கேது அந்த குடுப்பினையெல்லாம்னு நொந்து கொண்டு இல்லை என்று பதில் அளித்தேன், (அவளுக்கும் பாய் ஃபிரண்டு இல்லையாம்) பிறகு அந்த ஊரை பற்றி, சொந்த வாழ்க்கை பற்றி, அவரவர் குடும்பம் பற்றி எல்லாம் பகிர்ந்து கொண்டோம். காஃபியும் வந்தது பருகிக்கொண்டே பேச்சும் தொடர்ந்தது, சில நிமிடங்களில் Cell Phone ஒலிக்க நடுங்கித்தான் போனேன், ஏது வழக்கம் போல் என் Cell Phone Alarm ஒலி கேட்டு பதறியடித்து எழுந்து அடச்சே கனவா என்று சொல்ல நேர்ந்துவிடுமோ என்று எண்ணி தான், நல்ல வேளையாக அவ்வாறு இல்லை என்பதை கிள்ளிப் பார்க்காமல் தெரிந்துகொண்டேன். அவள் அலைபேசியில் பேசி முடித்துவிட்டு, இன்று தன்னால் ஊர் சுற்ற வரமுடியாது என்றும் இந்த வாரத்தில் இன்னொரு நாள் அழைத்துச் செல்வதாகவும் கூறினால் (எல்லாம் உங்க வயித்தெரிச்சல் தான்ப்பா) இப்போ நான் என்ன செய்ய, ஹோட்டலுக்கு போய் தூங்க வேண்டியது தான். நோ ப்ராப்ளம் என்று சொல்லி விதியை நொந்துகொண்டு டாட்டா கூறி விடை பெற்றோம்.
45 நிமிடங்கள் சென்றது தெரியவே இல்லை. பெண்கள் நம் வாழ்வில் சில தருணங்களை அழகாக்கவும், நினைவை விட்டு அகலாமலும் செய்யத் தவருவதில்லை.
ஆஸ்திரியா அழகியுடன் அருமையான காஃபி!!!!
அலுவலகத்தில் வழக்கம் போல் அறிமுகப்படுத்தும் கூட்டம் நடந்தது, அங்கு தான் கண்டேன் சாராவை அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு, நம்ம ஊரு பொண்ணுங்ககிட்ட இருக்க எந்த அம்சமும் இல்லை இருந்தாலும் அழகு, (அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே பாட்டு உள்ளுக்குள் கேட்க்க, வாயில் வடிந்த வாட்டர் ஃபால்சை துடைத்துவிட்டு) இருவரும் கை குலுக்கினோம் (பேக்ரௌண்டுல குணா பாட்டு "பார்த்த விழி" பாட்டு தான்). சாரா சிறு குறிப்பு - என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் அழகை, மாதுளை நிறம், நீல நிறக்கண்கள், கூந்தல் அந்நாட்டவர்க்கே உரித்தான நிறம், இது போதுமென்று நினைக்கிறேன். (இதுக்கு மேல சொல்லி யாரு அடிவாங்குறது, மேலும் நான் கவிஞர் கருப்பு இல்லை)
மதிய உணவு (என்ன வெரைட்டி ரைஸா கிடைக்கும் வல்க்கர் தான்) பர்கர் தான். மாலை மங்கியது, நான் ஹோட்டலுக்கு கிளம்பும் தருவாயில் சாரா அழைத்தாள் (அடுத்த மியூசிக் என் இனிய பொன் நிலாவே கிட்டார் மியூசிக் ஒலித்தது) அப்படியே திரும்பி என்னவென்று வினவினேன் 6 மணிக்கு என்னை அருகில் உள்ள காஃபி ஷாப்பில் சந்திப்பதாகவும் அருகில் இருக்கும் இடங்களை சுற்றிக் காட்டுவதாகவும் சொன்னாள் (இதற்காகத் தானே ஆசை பட்டாய் என விவேக்கின் குரல் ஒலித்தது) நானும், உங்கள் நேரத்தை என்னோடு செலவு செய்வதற்கு நன்றி என கூறினேன், புன்னகையை உதிர்த்து 6 மணிக்கு சந்திப்போம் எனக் கூறி மறைந்தாள்.
உள்ளுக்குள்ளே பட்டாம்பூச்சி கூட்டமே பறந்து கொண்டிருந்தது இருக்காதா பின்னே, வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பெண்ணுடன் காஃபி, ஊர் சுற்றுதல் இன்று கடவுள் எனக்கு நல்லவராய்த் தெரிந்தார்.
சரியாக 6 மணிக்கு ஆஜரானேன் காஃபி ஷாப்பில், சில வினாடிகளில் அவளும் வந்தால். அவளே இருவருக்கும் மெனு கார்டில் இருந்த மோக்கா காஃபியும் சில இனிப்பு ரொட்டிகளும் ஆர்டர் செய்தால். பேசத் துவங்கினோம், அவள் கேட்ட முதல் கேள்வி Do you have a Girl Friend ?? நமக்கேது அந்த குடுப்பினையெல்லாம்னு நொந்து கொண்டு இல்லை என்று பதில் அளித்தேன், (அவளுக்கும் பாய் ஃபிரண்டு இல்லையாம்) பிறகு அந்த ஊரை பற்றி, சொந்த வாழ்க்கை பற்றி, அவரவர் குடும்பம் பற்றி எல்லாம் பகிர்ந்து கொண்டோம். காஃபியும் வந்தது பருகிக்கொண்டே பேச்சும் தொடர்ந்தது, சில நிமிடங்களில் Cell Phone ஒலிக்க நடுங்கித்தான் போனேன், ஏது வழக்கம் போல் என் Cell Phone Alarm ஒலி கேட்டு பதறியடித்து எழுந்து அடச்சே கனவா என்று சொல்ல நேர்ந்துவிடுமோ என்று எண்ணி தான், நல்ல வேளையாக அவ்வாறு இல்லை என்பதை கிள்ளிப் பார்க்காமல் தெரிந்துகொண்டேன். அவள் அலைபேசியில் பேசி முடித்துவிட்டு, இன்று தன்னால் ஊர் சுற்ற வரமுடியாது என்றும் இந்த வாரத்தில் இன்னொரு நாள் அழைத்துச் செல்வதாகவும் கூறினால் (எல்லாம் உங்க வயித்தெரிச்சல் தான்ப்பா) இப்போ நான் என்ன செய்ய, ஹோட்டலுக்கு போய் தூங்க வேண்டியது தான். நோ ப்ராப்ளம் என்று சொல்லி விதியை நொந்துகொண்டு டாட்டா கூறி விடை பெற்றோம்.
45 நிமிடங்கள் சென்றது தெரியவே இல்லை. பெண்கள் நம் வாழ்வில் சில தருணங்களை அழகாக்கவும், நினைவை விட்டு அகலாமலும் செய்யத் தவருவதில்லை.
ஆஸ்திரியா அழகியுடன் அருமையான காஃபி!!!!